(அபூஸாலி முஹம்மத் சுல்பிகார்)
சீனாவில் சிறுபான்மை முஸ்லிம்களுக்கு எதிராக கடுமையான சட்டத்திட்டங்கள் அமுலாக்கப்பட்டுள்ளன.
முஸ்லிம் கடும்போக்குவாதத்தை தடுப்பதற்காக இவ்வாறான சட்டங்கள் அமுலாக்கப்படுவதாக சீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக நீளமாக தாடி வளர்த்தல், ஹிஜாப் அணிதல் போன்றவற்றுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
சீனாவின் சின்சியாங் மாகாணத்தில் இந்த புதிய விதிகள் அமுலாக்கப்பட்டுள்ளன.
இந்த மாகாணத்திலேயே உய்கர்ஸ் முஸ்லிம்கள் அதிகளவில் வசிக்கின்றனர். தங்களுக்கு எதிராக பாரிய இடர்கள் ஏற்படுத்தப்படுவதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.
Post a Comment